Home இந்தியா டெல்லி வன்முறை – உயிரிழப்பு 35ஆக அதிகரிப்பு – சிசிரிவி கமராக்கள் காவல்துறையினரால் உடைப்பு

டெல்லி வன்முறை – உயிரிழப்பு 35ஆக அதிகரிப்பு – சிசிரிவி கமராக்கள் காவல்துறையினரால் உடைப்பு

by admin


டெல்லியில் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கி, நான்கு தினங்களாக, குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.  நேற்று 26ஆம் திகதி வரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27ஆக இருந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்து 35ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான வன்முறைச் சம்பவத்தின் போது, காவல்துறையினரே சிசிரிவி கமராக்களை உடைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு நேற்று (பெப்ரவரி 26) டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையினரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்ததுடன் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யாததற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அதுபோன்று டெல்லி வன்முறைக்கு, காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம் எனவும் உச்ச நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காவல்துறையினரே சிசிரிவி கமராக்களை உடைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. குரேஜிகாஸ் போராட்டக் களத்திலிருந்த சிசிடிவிகளை காவல்துறையினர் உடைத்ததற்கனான வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.  #டெல்லி  #வன்முறை  #உயிரிழப்பு  #சிசிரிவி  # குடியுரிமை திருத்தச் சட்டம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More