Home இலங்கை உலகின் தொலைத்தொடர்புச் சந்தையில், ஜாம்பவானாகியது லைக்கா நிறுவனம்!!!

உலகின் தொலைத்தொடர்புச் சந்தையில், ஜாம்பவானாகியது லைக்கா நிறுவனம்!!!

by admin

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 7600 கோடி (76பில்லியன்) பெறுமதியில் கொள்வனவு செய்ததன் மூலம் ஸ்பெயினில் லைக்காவின் நீண்ட கால இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது என்பதும் வரலாறாகிறது.

2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தன்னை நிலை நிறுத்திய லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) மிகக் குறைந்த கட்டணத்தில் தனது உயர் தரமான சேவையை விரிவுபடுத்தியது. இதன் மூலம் 1.5 மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்ட பிரமாண்டமான MVNO சேவையைக் கொண்ட நிறுவனமாக லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) உருவெடுத்தது.

இதுவே ஸ்பெயினின் மாஸ்மோவில் ( Masmovil ) நிறுவனம் லைக்கா நிறுவனத்தின் ஸ்பெயின் வலையமைப்பைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அமைந்து. இதன் மூலம் தொலைத்தொடர்பு சேவைச் சந்தையில் லைக்காமொபைல் (lycamobile) சாதனை படைத்துள்ளது.

இந்தப் பரிவர்த்தனை குறித்து லைகா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் தெரிவிக்கையில் “நாங்கள் ஸ்பெயினுக்குள் நுழைந்தபோது, நாட்டின் மிகப் பெரிய MVNO வை அதிஉயர் தரமான சேவையாகவும், குறைந்த கட்டணத்திலான தொலைத்தொடர்புச் சேவையாகவும் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கனவு கண்டோம். அந்தக் கனவு நனவாகி இப்போது அந்த பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்” எனத்தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஸ்பெயினில் லைக்கா தொலைத்தொடர்புச் சேவையை மாஸ்மோவில் (Masmovil ) நிறுவனம் கொள்வனவு செய்வதென்பது லைக்காவின் உலகளாவிய வெற்றியை உறுதிப்படுதிப்படுத்தி உள்ளது. அத்துடன் மாஸ்மோவில் (Masmovil ) நிறுவனம், லைகாமொபைல் இலட்சனையை (Brand) நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக் கொள்ள இணங்கியிருப்பது, லைக்காவின் நிறுவனத்தின் பெருமிதமாகவும் கொள்ளப்படுகிறது.

இதேவேளை மாஸ்மோவில் நிறுவனம் ( Masmovil ) ஸ்பெயினில் மிகச் சிறந்த மற்றும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வளர்ச்சி அடையவேண்டும் என, லைகா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தொடர் வெற்றிகளைத் தனதாக்கும் லைக்கா நிறுவனம் தொடர்ந்தும் “உலக அளவில் 23 நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தைகளில் பிரமாண்ட செயற்பாட்டை தக்கவைத்துள்ளதுடன், புதிய நாடுகளில் தனது சேவையை விரிவாக்கும் உற்சாகமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தப் புதிய நுழைவுகளின் மூலம் லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) உலகளாவிய இருப்பைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் உகாண்டாவில் அண்மையில் ஆரம்பித்த MNO சேவையின் மூலம் தெலைத்தொடர்பு தொழில்துறையில் லைகாமொபைல், தனது அடுத்த கட்ட நகர்வையும், திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More