83
இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் மே மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
12 ஆம் திகதி முதல் வேட்புமனு தாக்கல்
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சு திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love