Home உலகம் பிரித்தானியாவில் கொரோனா இறப்பு 335 ஆக உயர்வு

பிரித்தானியாவில் கொரோனா இறப்பு 335 ஆக உயர்வு

by admin

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணித்தியாலத்தில் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததனையடுத்து இவ்வாறு 335 ஆக  உயர்வடைந்துள்ளதாக  சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் மேலும் 46 பேரும் , வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து தலா நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 47 முதல் 105 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அனைவருக்கும் அடிப்படை சுகாதார நிலைமைகள் இருந்தன எனவும் என்ஹெச்எஸ் இங்கிலாந்து ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சமூக தொலைதூர வழிகாட்டுதல்களை பிரித்தானியர்கள் பின்பற்றாவிட்டால் முழு பூட்டுதல் வரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.   #பிரித்தானியா #கொரோனா  #இறப்பு  # உயர்வு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More