Home இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் முகமாக நடந்து கொண்ட காவல்துறை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் முகமாக நடந்து கொண்ட காவல்துறை

by admin
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் முகமாக யாழ்ப்பாண காவல்துறையினர் நடந்து கொண்டனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் செம்மணி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நிகழ்வு ஆரம்பமாகவிருந்த வேளை அப்பகுதிக்கு வந்திருந்த , யாழ்ப்பாண  காவல்துறையினர்  நிகழ்வினை நடாத்த விடாது தடைகளை ஏற்படுத்தும் முகமாக அஞ்சலி நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை மிரட்டி அப்புறப்படுத்த முனைந்தனர்.
அதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், நாம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம் என கூறி நிகழ்வினை ஆரம்பிக்க முற்பட்டனர். அவ்வேளை அவ்விடத்திற்கு மூன்று மோட்டார் சைக்கிளில்   ஆறு  இராணுவத்தினர் , நிகழ்விடத்தில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக வந்திருந்தனர்.
காவல்துறையினரின் தடைகளை மீறி நிகழ்வுகளை நடாத்த முற்பட்ட போது , நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என கடுமையாக எச்சரித்தனர். அந்த தடைகளை மீறி சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய சமூக இடைவெளியை பேணி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வுகள் முடிவடைந்ததும், நிகழ்வில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் தனித்தனியாக படம் எடுத்து அவர்களின் விபரங்களையும் பதிவு செய்தனர்.  #முள்ளிவாய்க்கால் #நினைவேந்தல்  #செம்மணி
 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More