Home இலங்கை விடுவிக்கப்பட்ட காணிகளில் பயன்தரு மரங்களையாவது நடுங்கள்

விடுவிக்கப்பட்ட காணிகளில் பயன்தரு மரங்களையாவது நடுங்கள்

by admin

 “படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது. குடியமராவிடினும் மக்கள் தமது காணிகளில் பயன்தரு மரங்களை நட்டு பயன்பெறவேண்டுகின்றேன்” என  யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தெரிவித்தார்.

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தியாகி அறக்கட்டளையினால் வீடு ஒன்று அமைத்து வழங்கப்பட்டது. இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முப்படையினர் வசமிருந்த பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அவை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன பொதுமக்களின் மிகக் குறைதளவான காணிகளிலேயே முகாமை அமைத்து உள்ளன.

எனினும் விடுவிக்கப்பட்ட காணிகள் பலவற்றின் மக்கள் மீள்குடியமரவில்லை. அவர்களது காணிகள் படையினரிடமிருக்கும் போது செழிப்பாக இருந்தன. எனினும் இப்போது பராமரிப்புகளற்று பற்றைக் காணிகளாக உள்ளன.

எனவே மக்கள் தற்போது மீள்குடியமராவிடினும் காணிகளை பராமரித்து பயன்தரு மரங்களை நடவேண்டும் தென்னை மரங்களை நடுவதனால் சில வருடங்களில் நல்ல பயனைப் பெற முடியும் – என்றார்.   #உரிமையாளர்கள்  #பயன்தருமரங்கள் #முப்படையினர்

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More