Home உலகம் ஜெர்மனியில் சமூக இடைவெளி விதிகள் ஜூன் 29வரை நீடிப்பு

ஜெர்மனியில் சமூக இடைவெளி விதிகள் ஜூன் 29வரை நீடிப்பு

by admin


கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி விதிகளை ஜூன் 29 ஆம் திகதிவரை நீடித்து ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளி விதிகள் மற்றும் சில கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என ஜெர்மனி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருந்தது. ஜெர்மனியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கடைகள், பாடசாலைகள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றைத் திறக்கத்திட்டமிட்டு வருகிறோம். தற்போது ஜெர்மனில் கொரோனா பரவலின் முதல் கட்டத்தைக் கடந்துவிட்டாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 1,81,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. மேலும் அங்கு 8,498 பேர் பலியாகியுள்ள நிலையில் 1,62,000 பேர் குணமடைந்துள்ளனர்.

ஜெர்மனியில் கொரோனா பரவலின் முதல் கட்டத்தைக் கடந்துவிட்டாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியுள்ளது. #ஜெர்மனி  #சமூகஇடைவெளி  #கொரோனா

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More