Home இலங்கை கல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

கல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

by admin
மருதமுனை துறைநீலாவணை எல்லை   பகுதியில் குதிரைகளின்    நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு  மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில்   திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம்  கல்முனை மாநகர  சபை பிரிவுக்குற்பட்ட மருதமுனை  துறைநீலாவணை எல்லை  பகுதியில்  அதிகமான குதிரைகள்  காணப்படுகின்றது. குறித்த குதிரைகள்  அப்பகுதியில் ஒன்றோடு ஒன்று சண்டை பிடிப்பதோடு அதி வேகமாக ஓடுகின்றது.
குறித்த குதிரைகள் வீதிகளில் நடமாடுவதனால்   பாதசாரிகள் தாக்குதலுக்கு  உள்ளாகுவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றது.
சுமார் சிறியது முதல் பெரிய குதிரைகள் வரை காணப்படுவதுடன் வீதியில் செல்லும் மக்களை சீண்டவும் முற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. #கல்முனை  #குதிரைகள் #நடமாட்டம் #பாதசாரிகள்
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More