Home இலங்கை இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

by admin

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தச் சேர்ந்த இரு அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் இந்தியா திரும்பிய நிலையில், அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரை, யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்புக்கு, பேருந்தில் அழைத்துச் சென்ற இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரும் குறித்த இந்தியப் பிரஜையுடன் தங்கியிருந்தபோது உயிரிழந்த மற்றுமொரு இந்தியப் பிரஜையின் மரணத்தை உறுதிப்படுத்திச் சான்றிதழ் வழங்கும் பணியை மேற்கொண்டவருமே, இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். #இந்திய  #தூதரகஅதிகாரிகள் #தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்#இணுவில்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More