Home இந்தியா காணாமல் போன நான்கு மீனவர்களில் ஒருவர் மீட்பு

காணாமல் போன நான்கு மீனவர்களில் ஒருவர் மீட்பு

by admin

காணாமல் நான்கு மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ‘கொரோனா’ மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்கு பின் கடந்த சனிக்கிழமை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 622 விபை;படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரெஜின் பாஸ்கர்,மலர்,ஆனந்த்,ஜேசு ஆகிய நான்கு மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை.
இதனையடுத்து மீனவர்னகளின் உறவினாகள் மீனவர்களை தேடும் பணியினை துரிதபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்த போது உயிருக்க போராடிய நிலையில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஜேசு என்ற மீனவரை மீட்டு   சிகிச்சைக்காக மணல் மேல்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இவருடன் மீன் பிடிக்க சென்று மாயமான மூன்று மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான உலங்கு வானுர்தி மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. #காணாமல்போன  #மீனவர்  #மீட்பு #இராமேஸ்வரம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More