Home உலகம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேருக்கு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேருக்கு

by admin


உலகமெங்கிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரும் புகழ்பெற்ற துடுப்பாட்ட வீரருமான ஷகித் அஃப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய அணியில் விளையாடி வரும் இரண்டு வீரர்கள் உள்ளிட்ட மூன்று பேருக்குப் புதிதாக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏதிர்வரும் யூன் 24ஆம் திகதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கிரிக்கெட் வீரர்கள் ஹைதர் அலி, ஹரீஷ் ராஃப் மற்றும் ஷாதப் கான் ஆகிய மூன்று பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தபோதும், தொற்று இருப்பது கண்டறியப்பட்டதனைத் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3500-ஐக் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #பாகிஸ்தான் #கிரிக்கெட் #கொரோனா

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More