இலங்கை பிரதான செய்திகள்

பலாலி காவல்நிலையம் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே சேவையை ஆரம்பித்தது

பலாலி காவல் நிலைய சேவைகளை பிரிவு மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே வளலாய் அந்தோணிபுரத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை அத்தியட்சகர் சேனாதீரவின் வழிகாட்டலில் பலாலி காவல்நிலைய நடமாடும் பொலிஸ் பிரிவு என்ற திட்டத்தின் கீழ் காவல்காவல்துறை சேவைகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பலாலி காவல் நிலையம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது. அதனால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அச்சுவேலி, காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை காவல் நிலையங்களில் என காவல்துறை சேவைகளைப் பெற்று வந்தனர்.

இந்த நிலையில் பலாலி காவல்துறைபிரிவுக்குட்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்ற விடயம் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை அத்தியட்சகர் சேனாதீரவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதுதொடர்பில் நடவடிக்கை எடுத்த அவர், பலாலி காவல்நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கப்படும் வரை பலாலி – வளலாய் அந்தோணிபுரத்தில் நடமாடும் காவல்துறை பிரிவு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தப் பிரிவு 24 மணித்தியாலங்களும் சேவையை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #பலாலி  #காவல்நிலையம்  #உயர்பாதுகாப்புவலயம் #அச்சுவேலி #காங்கேசன்துறை

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.