Home இலங்கை மண்டைதீவு கடலில் வீசப்பட்ட 26 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

மண்டைதீவு கடலில் வீசப்பட்ட 26 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

by admin

மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 426 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.  அதனைக் கடத்திச் சென்றவர்கள் கடலில் வீசிவிட்டு படகில் தப்பித்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை  காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

“மண்டைதீவு கடற்படையினர் வழமையான கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, படகு ஒன்றிலிருந்து பொதிகள் கடலில் வீசப்படுவதை அவதானித்தனர். அதனை துரத்திச் சென்ற போது, படகில் பயணித்தவர்கள் தப்பித்துவிட்டனர். பொதிகளை மீட்டு ஆராய்ந்த போது அவற்றுள் கஞ்சா போதைப்பொருள் உள்ளமை கண்டறியப்பட்டது.
மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் ஊர்காவற்றுறை  காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று  காவல்துறையினர் கூறினர். #மண்டைதீவு  #கஞ்சா  #போதைப்பொருள் #கடற்படையினர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More