பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது புகையிரதம் மோதி ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் அருகே சீக்கிய பயணிகள் சிலர் சுற்றுலா சென்று கொண்டிருந்த பேருந்து ஷேக்புரா என்ற பகுதியில் ஆளில்லா புகையிரத தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த புகையிரதத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது #பாகிஸ்தான் #புகையிரதம் #பயணிகள்பேருந்து #விபத்து
Spread the love
Add Comment