Home இந்தியா தலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு இடைக்கால தடை

தலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு இடைக்கால தடை

by admin

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தலைமைச் செயலகத்தை இடித்து விட்டு 400 கோடி ரூபா செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தெலங்கானா முதல்லமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தீர்மானித்திருந்தமைக்;கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.எனினும் நிஜாம் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமும் இதில் உள்ளதால், இது மிகவும் பழமை வாய்ந்தது எனக் கூறி இதை இடிக்க தடை விதிக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

அதேவேளை தலைமைச் செயலகத்தில் உள்ள 9 தனித்தனி கட்டிடங்களில் ஒன்று நிஜாம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதனை காரணம் காட்டி, இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு அனுமதியும் பெற்றிருந்தது.

இதை அடுத்து 6 லட்சம் சதுர அடியில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது #தலைமைச்செயலகம்   #இடிப்பதற்கு #தடை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More