Home இலங்கை இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது…

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது…

by admin

இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 07 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2752 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2064 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 677 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More