Home இந்தியா இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 45,601 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 45,601 பேருக்கு கொரோனா

by admin

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 45,601 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 12 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில சமீப நாட்களாக 35,000க்கும் மேல் ஒரு நாள் பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 45,601 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநில சுகாதாரத் துறை சார்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 28,472 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 12,39,684 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 4,25,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,84,266 பேர் குணமடைந்துள்ளதுடன் உயிரிழப்பு 29,890 ஆக அதிகரித்துள்ளது

மகாராஷ்டிராவில் உச்சபட்சமாக நேற்று ஒரு நாள் பாதிப்பு 10,576 ஆகவும் தமிழகத்தில் புதிய உச்சமாக 5,849 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜூலை 19ஆம் திகதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தைக் கடந்திருந்த நிலையில் அடுத்த மூன்று தினங்களில் ஒரு லட்சம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #இந்தியா #கொரோனா #சுகாதார

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More