Home இலங்கை கூட்டமைப்பு வேட்பாளர்கள் யாழ் ஆயருடன் சந்திப்பு

கூட்டமைப்பு வேட்பாளர்கள் யாழ் ஆயருடன் சந்திப்பு

by admin
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் யாழ் ஆயரை இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை  ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.
இச் சந்திப்பில் வேட்பாளர்களான  எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், திருமதி சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தேர்கள் கள நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர் #தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு  #வேட்பாளர்கள்  #யாழ்ஆயர்
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More