Home இலங்கை நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவு   பிற்பகல் 2 மணிக்குள் வெளியாகும்

நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவு   பிற்பகல் 2 மணிக்குள் வெளியாகும்

by admin

(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவு இன்று பிற்பகல் 2 மணிக்குள் வெளியாகும் என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

நுவரெலியா  மாவட்டத்தில் பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள் 4 இல் இன்று காலை 8 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமானது. இப்பகுதியில் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இருந்தும் அதிகாரிகள் உரிய நேரத்தில் கடமைக்கு சமூகமளித்திருந்தனர்.

நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதிக்கான வாக்குகள் காமினி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள 48 வாக்கெண்ணும் நிலையங்களில் எண்ணப்படவுள்ளன.ஹங்குராங்கத்த மற்றும் வலப்பனை தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குகள், 25 வாக்கெண்ணும் நிலையங்களில் எண்ணப்பட்டுவருகின்றன. கொத்மலை தொகுதிக்கான வாக்குகள், 13 நிலையங்களில் எண்ணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் ஒன்றரை இரண்டு மணியளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம். மாவட்டத்தில் 75சதவீத வாக்கு பதிவே இடம்பெற்றது. அதேபோல் நுவரெலியா மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. சீரற்ற காலநிலையே சிறு இடைஞ்சலை ஏற்படுத்தியது. #நுவரெலியா  #தேர்தல்  #வாக்கெண்ணும்நிலையங்கள்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More