Home இந்தியா ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும்

ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும்

by admin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் திகதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியதில் காவல்துறையினா் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந்திகதிஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயா்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருவதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றில் பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்திருந்தநிலையில் . 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8ம் திகதிஇந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, தூத்துக்குடியின் முக்கிய இடங்களில் காவல்துறையினா் குவிக்கப்பட்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது #தூத்துக்குடி #ஸ்டெர்லைட்ஆலை #தடை #தொடரும்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More