Home இலங்கை பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட கணவன் மனைவி உட்பட மூவா் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட கணவன் மனைவி உட்பட மூவா் கைது

by admin

யாழில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் சாவகச்சேரி சுன்னாகம் பகுதிகளில் அண்மைய  நாட்களில் இரவு வேளைகளில் வீட்டில் தனிமையில் இருந்த வயோதிபர்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட மூவரே யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். 


 கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 பவுண் திருடப்பட்ட நகைகள் மற்றும்திருடப்பட்ட 20 பவுண்  நகைகளுக்கான அடைவு சீட்டுக்கள், அடையாள அட்டைகள் மற்றும்  கடவுச்சீட்டுக்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது 


கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கணவன்-மனைவி மற்றும்  அவர்களோடு திருட்டில் ஈடுபட்டவர் என காவல்துறையின தெரிவித்துள்ளனர்
  அண்மைய நாட்களில் வீடுகளில் தனித்திருக்கும் முதியவர்களை இலக்கு வைத்து குறித்த குழுவானது இரவு வேளைகளில் வீட்டின்  கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி வயோதிபர்களை  கடுமையாக தாக்கிய நகை, பண  கொள்ளையில் ஈடுபட்டிருந்தது. 


யாழ் மாவட்டத்தின் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான  முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான குழுவினரால் குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
கைது செய்யப்பட்ட மூவரிடமும் காவல்துறையினா் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #யாழ் #திருட்டு #கணவன் #மனைவி #கைது #கொடிகாமம் #சாவகச்சேரி #சுன்னாகம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More