Home இலங்கை 20வது திருத்தம் – அறிக்கை இன்று அமைச்சரவையில்

20வது திருத்தம் – அறிக்கை இன்று அமைச்சரவையில்

by admin

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கையானது நேற்றையதினம் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டது.

.20ஆவது திருத்தம் தொடர்பில் புதிதாக உள்ளடக்கப்பட வேண்டிய மற்றும் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவின் உறுப்பினர்கள் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு பிரதமரினால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் அமைச்சர் ஜி.எல்.பீரிசின் தலைமையில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #20வதுதிருத்தம் #அரசியலமைப்பு #அமைச்சரவை #அலரிமாளிகை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More