உலகம் பிரதான செய்திகள்

மூக்கு கண்ணாடி அணிவதனால் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனையின் கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்விலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது இணைந்த மருத்துவமனை ஆராய்ச்சியாளர்களும் பங்குபற்றிய இந்த ஆய்வின் முடிவு மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.

அதில் நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது.

ஒரு நாளில் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது எனவும் அவா்கள் கண்ணாடி அணிவதால், அவர்கள் கண்களை அடிக்கடி தொடுகிற வாய்ப்புக்கு அது ஒரு தடையாக அமைந்திருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒற்றை ஆய்வாக அமைந்துள்ள நிலையில் இதை உறுதி செய்வதற்கு கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன எனவும் பல இடங்களில் பெரிய அளவுகளில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த முடிவானது தொற்றுநோயியல் கண்ணோட்டத்தில், ஒரு ஒற்றை ஆய்வின் முடிவு என்பதால் கவனமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கண்ணாடிகள் , அசுத்தமான கைகளில் இருந்து கொரோனா பரவுவதற்கு எதிராக செயல்படக்கூடும் என்பதனை ஒப்புக்கொண்டுள்ளார். #மூக்குகண்ணாடி #கொரோனா #பாதுகாப்பு #விஞ்ஞானிகள்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.