Home இலங்கை சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்ட மணல் மீட்பு

சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்ட மணல் மீட்பு

by admin

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாற்று பகுதியில் மூன்று இடங்களில்    எவ்வித அனுமதியும் இன்றி சட்ட விரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கியூப் மணலை இன்று வெள்ளிக்கிழமை(18)  காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

 
மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின்; வழி காட்டலின் கீழ் மன்னார் இலுப்பைக் கடவை காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குறித்த மணலை  மீட்டுள்ளனர்.


-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை  பாலியாறு காட்டுப்பகுதிக்குள் அனுமதிப் பத்திரமின்றி மணலை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இரண்டு இடங்களையும் , பாலியாறு ஊர் பகுதியில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த ஒரு களஞ்சிய இடத்தினையும், கண்டுபிடித்த காவல்துறையினா் அவ்விடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத சுமார் 45 கியூப் மணலை கைப்பற்றி உள்ளனர்.-இலுப்பைக்கடவை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார்   நீதிமன்றத்தில் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


-தொடர்ச்சியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும்,மனன்hர் மாவட்டத்தில் முசலி,நானாட்டான்,மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #பாலியாற்று #மாந்தை #சட்டவிரோத #மண்அகழ்வு #மீட்பு

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.