Home இலங்கை அம்பாறையில் காவல்துறையினா் திடீர் சோதனை

அம்பாறையில் காவல்துறையினா் திடீர் சோதனை

by admin

அம்பாறை  பிராந்தியத்தில் இன்று காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட  மாவட்ட  விசேட   போக்குவரத்து காவல்துறையினரின்   திடீர் சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

 இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது  சம்மாந்துறை புறநகரப்பகுதி,   கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி,  பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனையில்    சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,  தலைக்கவசம் அணியாது செல்வது,   ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது,  அதிவேகமாக செல்வது ,தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் காவல்துறையினரினால் வழங்கப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கையானது     அம்பாறை மாவட்ட சிரேஸ்ட   காவல்துறை அத்தியட்சகாின்   வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது    அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து    கல்முனை ,  சம்மாந்துறை ,சவளைக்கடை   காவல் நிலைய  போக்குவரத்து காவல்துறையினரும்  இணைந்து  முக்கிய சந்திகள்  பிரதான  வீதிகளில்  திடீர் சோதனை நடவடிக்கை  மேற்கொண்டனர் #அம்பாறை #காவல்துறையினா் #சோதனை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More