Home இலங்கை தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பிலிருந்த 69 பேருக்கு கொரோனா

தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பிலிருந்த 69 பேருக்கு கொரோனா

by admin

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 69 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேவையாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒ மற்றும் அவரது மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனை அடுத்து திவுலுபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட காவல்துறைப் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் இன்றும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 400 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #திவுலபிட்டிய #கொரோனா #ஊரடங்கு #தனிமைப்படுத்தல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More