Home இலங்கை “நொதேன் பவர் ” – பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற சம்மதம்…

“நொதேன் பவர் ” – பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற சம்மதம்…

by admin

யாழ்.சுன்னாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த “நொதேன் பவர்” நிறுவனத்தினால் பொறுப்பற்ற விதத்தில் வெளியேற்றப்பட்ட கழிவோயிலினால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் உற்பத்தி நிறுவனமான “நொதேன் பவர்” நிறுவனத்திலிருந்து வெளியேறிய கழிவோயில் அப்பிரதேசத்தை சூழவுள்ள வீடுகள் , தோட்டங்களின் குடிநீர் கிணறுகளில் கலந்தன. அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அது தொடர்பிலான திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதன் போது , என்ன அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளது, என்ன வழிமுறையில் வழங்கப்படும் போன்ற விடயங்களை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கலந்து கொண்டவர்கள் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டனர். அத்துடன் அது தொடர்பிலான தமது மேலதிக சந்தேகங்களையும் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டு , முடிவில் இழப்பீட்டினை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More