Home இலங்கை பொலநறுவைக்கு 20 தாதியர்கள் அனுப்பி வைப்பு

பொலநறுவைக்கு 20 தாதியர்கள் அனுப்பி வைப்பு

by admin
flie photo

பொலநறுவையில் உள்ள கொரோனோ சிகிச்சை நிலையத்திற்கு யாழ்.போதனா வைத்திய சாலையில் கடமையாற்றிய 20 தாதியர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 


கொரோனோ பெருந்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக கொரோனோ சிகிச்சை நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் சிகிச்சை நிலையங்களில் தாதியர் பற்றாகுறை நிலவுகின்றன. அதனால் கூடுதல் தாதியர்களை கடமைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 


அந்த வகையில் யாழ் போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் 4 தமிழ் தாதியர்கள் உட்பட 20 தாதியர்கள் பொலநறுவை கொரோனோ சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என வைத்திய சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  #பொலநறுவை #தாதியர்கள் #யாழ்போதனாவைத்தியசாலை #கொரோனோ

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More