Home இலங்கை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்றுமுதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள்

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்றுமுதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள்

by admin

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று  புதன்கிழமை முதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படா த வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு மருத்துவ பீடத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனியான வழி அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ.முருகானந்தன், மு.கலாமதி மற்றும் பேராசிரியர் செ.கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர் எனவும் அவர்களுடன் பணியாற்றுவதற்காக யாழ். பல்கலைக் கழகத்தினால் நான்கு நுண்ணுயிரியல் ஆய்வு கூடவியலாளர்களும் புதிதாகப் பணிக்கு அமர்த்தப் பட்டுள்ளனர்எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தனைத் தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்திலும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதபோதே யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பரிசோதனைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #யாழ்பல்கலைக்கழகம் #மருத்துவபீடம் #பிசிஆர்பரிசோதனைகள் #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More