ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோருக்காக காணி வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மாத்திரம் 13ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோருக்கு காணி வழங்கும் முகமாக அரசாங்கத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்கு கடந்த 16ஆம் திகதி முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.