Home இலக்கியம் வேலியில் தெரிந்த மனித வல்லபம் – சி.ஜெயசங்கர்.

வேலியில் தெரிந்த மனித வல்லபம் – சி.ஜெயசங்கர்.

by admin

வேலியை மறைப்பாய்க் கண்டனர் மனிதர்
வேலியை எல்லையாய்ப் போட்டனர் மனிதர்
வேலியில் இயற்கையை விளைத்தனர் மனிதர்
வேலியில் கலைநயம் காட்டினர் மனிதர்
வேலியில் பெருமையை நிறுத்தினர் மனிதர்
வேலியைத் தொல்லையாய்க் கொண்டனர் மனிதர்

வேலியில் பல்லுலகம்
வேலியால் நல்வாழ்வு
வேலியால் தகராறு
வேலியால் வெட்டுக்கொத்து

வெட்டி அழித்தனர்
வேலியை
கட்டி முடித்தனர்
மதிலை

மனிதர் கண்ட வேலியில்;
மனிதர் வடித்த கலையை
மனிதர் வளர்த்த இயற்கையை
மரஞ்செடி கொடிகளுடன்
வேலியில்
மனிதர் வளர்த்த பகையை
மதிலைக்கட்டி முடித்தனரோ?

பசுமை வேலியைப் பாடத்தில் படித்தவர்
இணையத்தில் தேடினர் முகநூலில் பகிர்ந்தனர்
விருப்பும் பகிர்வும் விறுவிறென்று ஏறியது

ஆரறிவார்
வேலி அறியாத்
தலைமுறையின் கனவு.

சி.ஜெயசங்கர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More