Home இலங்கை வாள்களுடன் கைதானவர்கள் மறியலில்

வாள்களுடன் கைதானவர்கள் மறியலில்

by admin

வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 


கைதடி பாலத்திற்கு அருகில் நேற்று முன்தினம் வீதி சோதனை நடவடிக்கையில் காவல்துறையினா் ஈடுபட்டிருந்த வேளை அவ்வழியாக வந்த ஹயஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை மறித்து சோதனையிட்ட போது அவற்றுள் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன.

அதனை அடுத்து வாகனங்களில் பயணித்த 6 பேரையும் கைது செய்த காவல்துறையினா் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் அவர்களை நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 


அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து ஆறு பேரையும் 2ஆம் திகதி வரையில் மறியலில் வைக்க உத்தரவிட்டது #வாள் #கூரியஆயுதங்கள் #விளக்கமறியல் #கைதடி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More