Home இலங்கை விசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகியுள்ளாா்

விசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகியுள்ளாா்

by admin

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நீதியமைச்சரால் நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக் குழுவிலிருந்து, காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவிலிருந்து தன்னை நீக்கி விட்டு, வேறொருவரை நியமிக்குமாறு அவா் நீதியமைச்சாிடம் கடிதம் மூலம் கோாியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காவல்துறை ஊடகப் பேச்சாளரை இந்த விசாரணைக்குழுவில் நியமிப்பதன் மூலம் அவர், விசாரணை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவார் என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.


இதற்கு பதிலளித்த அமைச்சர், அவர் சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை கட்டுப்பாடுகளுடன் செய்வார் எனவும் அவர் காவல்துறை இரகசிய தகவல்களை இதுவரை ஊடகங்களுக்கு அறிவித்ததாக எந்த குற்றச்சாட்டுகளும் பதிவாகவில்லை எனவும் அவர் மீது நம்பிக்கையிருப்பதாலேயே அவரை இப்பதவிக்கு நியமித்துள்ளனர் எனவும் தொிவித்துள்ளாா்.


 அத்துடன் அவர் காவல்துறை திணைக்களத்தின் சட்டப்பிரிவுகளுக்கு பொறுப்பான சட்டத்தரணி எனவும் ஒருவரைப் பற்றி தெரியாமல் அவர் மீதான நம்பிக்கைத் தொடர்பில் கருத்து வெளியிடுவது தவறு எனவும் கெஹெலிய ரம்புக்வெல தொிவித்துள்ளாா். #மஹரசிறைச்சாலை #விசாரணைக்குழு #அஜித்ரோஹண

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More