Home இலங்கை தீவகத்தில் தொடரும் சட்ட விரோத மாடறுப்பு

தீவகத்தில் தொடரும் சட்ட விரோத மாடறுப்பு

by admin

நிறைமாத பசுமாடு ஒன்றினை இனம் தெரியாத நபர்கள் கடத்தி படுகொலை செய்து இறைச்சி ஆக்கியுள்ளனர். 
வேலணை 7ஆம் வட்டார பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்த்தது வந்த சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான கறவை பசு மாட்டினை இனம் தெரியாதவர்கள் கடத்தி சென்று படுகொலை செய்து இறைச்சியாக்கியுள்ளனர். 


குறித்த பசுமாடு 20 நாட்களுக்குள் கன்று போட இருந்தாக அதனை வளர்த்தவர்கள் தெரிவித்தனர்.  அத்துடன் அது  தொடர்பில் ஊர்காவற்துறை காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். 
முறைப்பாட்டின் அடிப்படையில் பாவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


தீவக பகுதிகளில் இனம் தெரியாதவர்கள் வளர்ப்பு மாடுகளை கடத்தி படுகொலை செய்து இறைச்சிகளை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். 
அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாணத்தையும் தீவகத்தையும் இணைக்கும் யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் மண்டை தீவு சந்தியில் இராணுவம் , காவல்துறையினரின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

இருந்த போதிலும் தீவகத்தில் தொடர்ந்து பசுமாடுகள் உட்பட மாடுகள் இறைச்சியாக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவதனால் மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.  #தீவகத்தில் #சட்டவிரோத #மாடறுப்பு #சோதனைச்சாவடி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More