Home இலங்கை தண்ட பணத்தில் 10 வீதத்தை வழங்க தீர்மானம்

தண்ட பணத்தில் 10 வீதத்தை வழங்க தீர்மானம்

by admin

நீதிமன்றினால் அறவிடப்படும் தண்டப்பணத்தில் 10 வீதத்தினை நீதி அமைச்சுக்கு வாழங்க வலி.தென் மேற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. 


நீதிமன்றங்களில் குற்றவாளிகளாக காணப்பட்டு , அறவிட படும்  தண்ட பணம் அந்த பகுதி பிரதேச சபைகளுக்கு நீதி அமைச்சினால் வழங்கப்படும். அதன் மூலம் பிரதேச சபைகளுக்கு பெருமளவான வருமானங்கள் கிடைக்க பெற்று வந்தன. 

இந்நிலையில் நீதிமன்றங்களின் அபிவிருத்திக்காக நீதிமன்றங்களால் விதிக்கப்படும் தண்ட பணத்தை வழங்குமாறு நீதி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. 


அதனை அடுத்தே வலி. தென் மேற்கு பிரதேச சபை தண்ட பணத்தின் ஊடாக கிடைக்கும் வருமானத்தில் 10 வீதத்தினை நீதி அமைச்சுக்கு வழங்க தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  #தண்டப்பணம் #நீதி_அமைச்சு #வருமானங்கள்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More