Home இலங்கை சிங்கள மொழியில் விநியோகிக்கப்பட்ட சான்றிதழை ஏற்கமறுத்த தமிழ் இளைஞர்கள்

சிங்கள மொழியில் விநியோகிக்கப்பட்ட சான்றிதழை ஏற்கமறுத்த தமிழ் இளைஞர்கள்

by admin

கிளிநொச்சியில் சிங்கள மொழியில் விநியோகிக்கப்பட்ட சான்றிதழை தமிழ் இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளதையடுத்து, சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் நடத்தப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட சான்றிதழ், முழுமையாக சிங்கள மொழியில் அச்சிடப்பட்டிருந்ததை அவதானித்த இளைஞர்கள், அதற்கு அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் அதனை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மன்ற உதவி பணிப்பாளர் தபேந்திரன் கோவிட்-19 தொற்று காரணமாக தமிழ் மொழி எழுதுவினைஞர்கள் கடமைகளுக்கு வராததால், சிங்கள மொழி எழுதுவிளைஞர்கள் ஊடாக இந்த சான்றிதழ் அச்சிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சான்றிதழ் இளைஞர்களுக்கு வழங்குவதற்காக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதாகவும், இந்த சான்றிதழில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் கையெழுத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

தமிழ் ஊழியர்களை அழைக்க முடியாதமையினாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் எவ்வாறாயினும், இளைஞர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, தேவையான மொழியில் சான்றிதழை வழங்குவதற்கு தலைமை அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா். #கிளிநொச்சி #சிங்களமொழி #சான்றிதழ் #வீட்டுத்தோட்ட_போட்டி #வட_மாகாண

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More