Home இலங்கை டைனமைட் – சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது

டைனமைட் – சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது

by admin

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். 

44 வயதான ஆயுர்வேத வைத்தியரும் 41 வயதான மீனவர் ஒருவருமே இவ்வாறு டைனமைட்டுடன் கைது செய்யப்பட்டள்ளதாகவும் அவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சிகளும் டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும்  கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். 

திருகோணமலை கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். #திருகோணமலை #கிண்ணியா #டைனமைட் #ஆயுவேதவைத்தியர் #கைது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More