ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து, முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடா்பில் ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பில் இலங்கை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ஒத்துழைப்பு #இலங்கை #இந்தியா #கோரிக்கை #மனிதஉரிமைகள் #பொறுப்புக்கூறல்