Home பிரதான செய்திகள் ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் நிகழ்ச்சி இன்று ஆரம்பம்

ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் நிகழ்ச்சி இன்று ஆரம்பம்

by admin
Filephoto

கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 ம் திகதி முதல் ஓகஸ்ட் 8ம் திகதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் நிகழ்ச்சி ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுஷிமாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

2011-ம் ஆண்டு பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி வெற்றியீட்டிய போது அந்த அணிக்கு பயிற்சி அளித்த நோரியோ சசாகி முதல் நபராக தீபத்தை ஏந்தி செல்கிறார்.

முதல் நாளில் 15 பேர் தீபத்துடன் ஓட உள்ளனர். ஜப்பான் முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்த தீபம் பயணிக்கிறது. இதை 10 ஆயிரம் பேர் தொடர் ஓட்டமாக எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுடன் தொடர் ஓட்ட நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது #Olympics #கொரோனா #டோக்கியோ #ஒலிம்பிக்_தீபம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More