Home இலங்கை ஜேர்மனியிலிருந்து 31 தமிழ்ப் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனா்

ஜேர்மனியிலிருந்து 31 தமிழ்ப் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனா்

by admin

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 தமிழ்ப் புகலிட கோரிக்கையாளர்கள் நேற்றையதினம்(30) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனா்

மேற்படி டுசில்டோவ் சர்வதேச விமான நிலையத்தினூடாக நாடு கடத்தப்பட்டுள்ள புகலிட கோரிக்கையாளர்கள் இன்றையதினம் இலங்கையை சென்றடைவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகின்றது.

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுசில்டோவ் விமான நிலையத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவா்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனா்.

அதேவேளை இவ்வாறு   புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ஜேர்மனியிலிருந்து #தமிழ்_புகலிடகோரிக்கையாளர்கள் #நாடுகடத்தப்பட்டனா்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More