Home இலங்கை யாழில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

by admin
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் பள்ளிவாசலில்  தொழுகையில் ஈடுபட்ட 14 பேர்  சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
அது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினா் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் அவர்கள் பள்ளிக்கு சென்ற வேளை அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த 14 பேரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More