Home இலங்கை மீன் வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற கோப்பாய் காவல்துறையினா்

மீன் வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற கோப்பாய் காவல்துறையினா்

by admin

பயணத்தடை காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் கையூட்டுப் பெற்ற கோப்பாய் காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பில் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரித்தில் ஈடுபட்ட வியாபாரியை அச்சுறுத்தி கோப்பாய் காவல் நிலைய உத்தியோகத்தர்கள் கையூட்டுப் பெற்றுள்ளனர்.

பணத்தை வழங்கிய மீன் வியாபாரி தனது பகுதி கிராம அலுவலகர் ஊடாக நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை உயர்மட்டத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கையூட்டுப் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்களை மீன் வியாபாரி அடையாளம் காட்டியுள்ளார்.
மேற்கொண்டு விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றன

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More