Home இலங்கை மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு

மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு

by admin

யாழ் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக, வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், இன்றைய தினம் (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் 25ஆம் திகதி அன்று நடைபெற்ற யாழ். மாநகர சபை அமர்வின் போது மாநகர சபை உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி நாய் என விளித்துப் பேசிய குற்றச்சாட்டுக்காக மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தை, ஒரு மாத காலத்துக்கு சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தடையானது, முரணானதெனக் குறிப்பிட்டு இவ்வாறு மேயருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More