Home இலங்கை வடக்கில் கள்ளுத்தவறணை திறக்க அனுமதி

வடக்கில் கள்ளுத்தவறணை திறக்க அனுமதி

by admin

வடமாகாணம் பூராகவும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றிகள்ளு தவணை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா தெரிவித்தார். பனைஅபிவிருத்தி சபை தலைமைக் காரியாலயத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,
கொரோனா நிலைமை காரணமாக சகல கள்ளு தவறனைகளும் மூடப்பட்டிருந்தது இதன் காரணமாக கள் விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மதுவரித் திணைக்களத்தினால் விசேட அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதாவது கள்ளினைபோத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கு முயற்சியை மேற்கொண்ட எமது ராஜாங்க அமைச்சர் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கள்ளு தவறனை களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தோம். அதற்கு சில நிபந்தனைகளுடன் வடக்கில் தவணைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

தவறனை திறக்க முடியும் ஆனால் தவறணைகளில் இருந்து கள் அருந்த முடியாது அத்தோடு அந்த பகுதியில் ஒன்று கூடி நிற்க முடியாது எனவும் சுகாதார நடைமுறையை பின்பற்றி கள் விற்க முடியும். எனவே  இந்த அனுமதி இணை சரியான முறையில் பயன்படுத்தி செயற்பட வேண்டும் என தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More