Home இலங்கை பசிலின் நுழைவு – பங்காளிக் கட்சிகளிடையே பதட்டம் – MY3ன் வீட்டில் “மந்திர ஆலோசனை”.

பசிலின் நுழைவு – பங்காளிக் கட்சிகளிடையே பதட்டம் – MY3ன் வீட்டில் “மந்திர ஆலோசனை”.

by admin

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

நாளை (08.07.21) குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று(06.07.21) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More