Home இலங்கை கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் குண்டுகள் வெடிக்கலாம்? விசாரணை ஆரம்பம்!

கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் குண்டுகள் வெடிக்கலாம்? விசாரணை ஆரம்பம்!

by admin

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் குண்டுகள் வெடிக்கவுள்ளன, என்ற செய்திகள் தொடர்பில் விரிவாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் செய்தி, சமூக வலைத்தளங்களில் நேற்று நள்ளிரவு (06.08.21) பதிவேற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டிலும், பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, கிருலப்பனை, தெஹிவளை மற்றும் நுகேகொடை ஆகிய இடங்களிலேயே குண்டுகள் வெடிக்க விருப்பதாக அந்த அச்சுறுத்தலில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அது குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More