Home இலங்கை சப்பர திருவிழாவான இன்று இடப வாகனத்தில் எழுந்தருளிய வேல் பெருமான்

சப்பர திருவிழாவான இன்று இடப வாகனத்தில் எழுந்தருளிய வேல் பெருமான்

by admin

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான சப்பர திருவிழாவின் போது இன்றைய தினம் வேல் பெருமான் , வள்ளி தெய்வானை சமேதரராய் இடப வாகனத்தில் எழுந்தருளி அருள் காட்சி அளித்தார். 


மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து வேல் பெருமான்,  வள்ளி தெய்வானையுடன் இடப வாகனத்தில் எழுந்தருளி உள்வீதியுலா வந்தார்.  கொரோனோ பெருந்தொற்று காரணமாக இம்முறை ஆலய வருடாந்திர மகோற்சவம் உள்வீதியில் பக்தர்களின் பங்கேற்பு  இடம்பெற்று வருகின்றன. அதனால் இம்முறை சப்பர திருவிழாவான இன்றைய தினம் சப்பரம் இழுக்காது , இடப வாகனத்தில் வேல் பெருமான், வள்ளி , தெய்வானையுடன் எழுந்தருளி இருந்தார். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More