Home இலங்கை தவிசாளர் தெரிவு -ஊடகவியலாளர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு

தவிசாளர் தெரிவு -ஊடகவியலாளர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு

by admin


மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்றைய தினம் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இடம் பெற்ற நிலையில்,குறித்த தவிசாளர் தெரிவில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


அத்துடன் புதிய தவிசாளர் தெரிவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும்,காதர் மஸ்தான் ஆகியோரையும் கலந்து கொள்ள காவல்துறையினா் அனுமதி மறுத்துள்ளனர்.


மேலும் மன்னார் பிரதேச சபையை சுற்றி காவல்துறைப் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டதோடு,பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் கலந்து கொள்ளச் சென்ற மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களும் பணியாளர்களும் காவல்துறையினரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


வடமாகாண ஆளுநரால் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று புதிய தவிசாளர் தெரிவு இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More