Home இலங்கை ஐ.நா காலநிலைமாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி புறப்பட்டார்

ஐ.நா காலநிலைமாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி புறப்பட்டார்

by admin

ஐக்கியஇராச்சியத்தின் ஸ்கொட்லாந்து -கிளஸ்கோவில் நடைபெறவுள்ள “COP: 26 ஐக்கியநாடுகள் அமைப்பின்காலநிலைமாற்றம்” தொடர்பானமாநாட்டில்கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (30) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.

காலநிலைமாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுத்து செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் ஐக்கியநாடுகள்காலநிலைமாற்றம் தொடர்பான மாநாடு, நாளை (31) தொடக்கம் நவம்பர் 12 வரை, கிளஸ்கோ நகரில்நடைபெறும். நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகள், உலகத்தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

“காலநிலைமாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்” என்று நடைபெறுகின்ற இம்மாநாட்டில், 197 நாடுகளின் அரசதலைவர்கள், அரசபிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறுதுறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் இருபத்தையாயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர். ஐக்கியஇராச்சியத்தில்இடம்பெற்றமாநாடுகளில், இதுவேமிகப்பெரியமாநாடாகக்கருதப்படுகிறது.

சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்தஅமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்கஅமைச்சர் துமிந்ததிசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித்வீரதுங்க, வெளிநாட்டுஅலுவல்கள் அமைச்சின்செயலாளர் அட்மிரல்பேராசிரியர்ஜயநாத்கொலம்பகே, சுற்றாடல்துறை அமைச்சின்செயலாளர் டொக்டர் அனில்ஜாசிங்கஆகியோரும், ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More