Home உலகம் உலகின் முதல் கொரோனா மாத்திரைக்கு பிரித்தானியா அனுமதி

உலகின் முதல் கொரோனா மாத்திரைக்கு பிரித்தானியா அனுமதி

by admin

உலகின் முதல் கொரோனா மாத்திரைக்கு பிரித்தானிய அரசு அனுமதியளித்துள்ளது.உலகளவில் இதுவரை 24.8 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 50.2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், பிரித்தானியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனாவுக்கு எதிரான மாத்திரைக்கு அனுமதியளித்த முதல் நாடு என்ற அந்தஸ்தை பிரித்தானியா பெற்றுள்ளது.

இந்த மாத்திரைக்கு மால்னுபிராவிர் (molnupiravir) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பிரித்தானியாவின், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையகம்  அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த மாத்திரை பிரித்தானியாவில் லேஜ்விரோ (Lagevrio ) என்ற பெயரில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மாத்திரையை அமெரிக்காவின் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

மெர்க் நிறுவனத்திடம் 4 லட்சத்துக்கு 80 ஆயிரம் மாத்திரைகளை வாங்க பிரித்தாினிய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் 2 கோடி மாத்திரைகளை உற்பத்தி செய்ய மெர்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பைஸர், ரோச்சே ஆகிய மருந்து நிறுவனங்களும் கொரோனாவுக்கு எதிரான மாத்திரைகளை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன.

கொவிட் 19 தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் இந்த மாத்திரையை அறிகுறி தொடங்கிய 5 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை இந்த மாத்திரையை உண்ண வேண்டும். இந்த மாத்திரையை உட்கொண்டால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பும், மருத்துவமனையின் அனுமதிக்கப்படும் அளவும் உடல் நிலை மோசமாவதும் 50% வரை குறையும் என ஆய்வறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More